கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக முடக்கலுக்கு உட்படது்தப்பட்ட பேருவளை, அழுத்கம, பயாகல ஆகிய பகுதிகளுக்கான சமூக முடக்கல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,
கொழும்பிலிருந்து புறப்படும் அனைத்து தபால் தொடருந்துகளும் (Mail Train) இன்று இரவு ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில பிரதேசங்களில் தபால் மற்றும் உப தபால் நிலையங்களின் சேவைகளை மீள் அறிவிக்கும் வரை இடை நிறுத்துவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல பிரதேசங்களிலும் மக்கள் தபால் மூலம் வரும் கடிதங்கள் மற்றும் பொதிகளைப் பெற்றுக்கொள்ள மறுப்பதன் காரணமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் இத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன் அடி்படையில் மேல் மாகாணம், காலி பிரதான தபால் நிலையம் மற்றும் அதன் உப நிலையங்கள், குருநாகல் மாவட்டத்தின் குலியாபிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள தபால் நிலையங்களின் சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தபால் சேவைகளினூடாக வழங்கி வரும் மருத்துவ பொருட்களுக்கான விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.